ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இலவச பரிசோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

19 மே 2021, 10:45 AM
கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இலவச பரிசோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

ஷா ஆலம், மே 19- கோவிட்-19 பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக  சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கமும்  அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, செலங்கா செயலி அறிமுகம், சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு உருவாக்கம் மற்றும் பொருளாதார மீட்சித் திட்டம் ஆகியவை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக நோய் பரவல் விகிதம் தேசிய அளவை விட குறைவாகவே உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று டிவிட்டர் வழி அவர் குறிப்பிட்டார்.

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் தவறாது பங்கு கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.