ad
NATIONAL

கோவிட் -19 தடுப்பூசி ஆபத்தில் உள்ள பிரிவினருக்கு  முன்னுரிமை அளிக்க வேண்டும்,

23 டிசம்பர் 2020, 2:54 PM
கோவிட் -19 தடுப்பூசி  ஆபத்தில் உள்ள பிரிவினருக்கு  முன்னுரிமை அளிக்க வேண்டும்,

ஷா ஆலம், டிச 23: மலேசிய அரசாங்கம்  கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதில், அதிக ஆபத்தில் உள்ள பிரிவினருக்கு  முன்னுரிமை அளிக்க வேண்டும், இந்தக் குழுவில் முன்னணி ஊழியர்கள், தொற்று நோயற்ற நோய்கள் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர்  என்று சிலாங்கூர் கோவிட் -19 சிறப்பு பணிக்குழுவின் (எஸ்.டி.எஃப்.சி) தலைவர்  டத்தோ ஸ்ரீ  டாக்டர்  சூல்கிப்லி அமாட்  கேட்டுக்கொண்டார்.

இந்த விஷயத்தில் அரசாங்கமும், மலேசியச் சுகாதார அமைச்சும்  மிகப் பொறுப்புடன் செயல்படுவது  அவசியம்  எனத் தான்   நினைவு படுத்த விரும்புவதாக   நேற்று இரவு ஆஸ்ட்ரோ அவானியில் 'சிலாங்கூரில் கோவிட் -19 நோய்த்தொற்றுகளை மேம்படுத்துவதற்கான சவால்' என்ற  நிகழ்வில் பேட்டி வழங்கும்போது  கூறினார்.

ஆரம்பமாக, கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்தில் 12.8 மில்லியன் டோஸ் பெற நாட்டிற்கு உதவும் வகையில், மருந்து நிறுவனமான  ஃபைசருடன் தடுப்பூசி வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இது முன்னணி ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும்.

மேலும், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்த ஊசி வழங்கப்படாது என  அறிவதாகக்  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.