பூச்சோங், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் 279 ஊராட்சி மன்ற இடங்களுக்குஅடுத்தாண்டு ஜனவரி மாதம் புதிய நியமனங்கள் செய்யப்படும்.
இந்த இடங்களை பி.கே.ஆர். கட்சியை சேர்ந்த 122 உறுப்பினர்களும் ஜசெக சார்பில்
97 உறுப்பினர்களும் அமானா கட்சியின் 60 உறுப்பினர்களும் நிரப்புவர் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
புதிதாக நியமனம் பெறும் உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி
வரை ஈராண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை பூச்சோங் ஜெயா சந்தையில் 2021 ஆம் ஆண்டிற்கான நாள் காட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை சொன்னார்.
கடந்த தவணையின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வழங்கிய சேவை குறித்து தாம் மனநிறைவு கொள்வதாகக் கூறிய அவர், பெரும்பாலான உறுப்பினர்கள் அடுத்த தவணையிலும் தங்கள் பொறுப்புகளை தொடர்வார்கள் என்றார்.
EKSKLUSIF
புதிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனவரி மாதம் நியமிக்கப்படுவாரகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தகவல்
6 டிசம்பர் 2020, 10:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

selangor
திறந்தவெளி எரிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு
Shalini Rajamogun
24 மே 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



