பூச்சோங், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் 279 ஊராட்சி மன்ற இடங்களுக்குஅடுத்தாண்டு ஜனவரி மாதம் புதிய நியமனங்கள் செய்யப்படும்.
இந்த இடங்களை பி.கே.ஆர். கட்சியை சேர்ந்த 122 உறுப்பினர்களும் ஜசெக சார்பில்
97 உறுப்பினர்களும் அமானா கட்சியின் 60 உறுப்பினர்களும் நிரப்புவர் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
புதிதாக நியமனம் பெறும் உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி
வரை ஈராண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை பூச்சோங் ஜெயா சந்தையில் 2021 ஆம் ஆண்டிற்கான நாள் காட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை சொன்னார்.
கடந்த தவணையின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வழங்கிய சேவை குறித்து தாம் மனநிறைவு கொள்வதாகக் கூறிய அவர், பெரும்பாலான உறுப்பினர்கள் அடுத்த தவணையிலும் தங்கள் பொறுப்புகளை தொடர்வார்கள் என்றார்.
EKSKLUSIF
புதிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனவரி மாதம் நியமிக்கப்படுவாரகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தகவல்
6 டிசம்பர் 2020, 10:48 AM
தொடர்புடைய செய்திகள்
national
இன்று காலை 11.00 மணி நிலவரப்படி முக்கிய நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து
n.pakiya
7 ஏப்ரல் 2024

national
கோவிட்-19 அதிகரிப்பின் எதிரொலி- பள்ளிகளில் முகக் கவசம் அணிய ஊக்குவிப்பு
n.pakiya
1 ஜனவரி 2024

national
வெ.20 லட்சம் செலவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் இணைக்கட்டட கட்டுமான பணி ஜனவரியில் ஆரம்பம்!
n.pakiya
9 டிசம்பர் 2023

national
சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது- 255 கண்காட்சியாளர்கள் பங்கேற்பு
n.pakiya
29 நவம்பர் 2023

உங்கள் கருத்து என்ன?




