ஷா ஆலம், நவ 6- சிலாங்கூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கானஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சட்ட விரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 1,983 ஆக இருந்த வேளையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 874 ஆக குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.
இத்தகைய குற்றங்களுக்கு ஊராட்சி மன்ற நிலையில் தண்டனை வழங்கும்
சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்ட விரோதமாக குப்பை கொட்டியது தொடர்பில் கடந்தாண்டில் 1,592 சம்பவங்கள்
தண்டனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாண்டு அத்தகைய சம்பவங்களின்
எண்ணிக்கை 364 ஆக குறைந்துள்ளது. காஜாங்கில் இந்த எண்ணிக்கை 151 இல் இருந்து 71 ஆக குறைந்துள்ளது என்றார் அவர்.
சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நில உரிமையாளர்கள் மீது மாவட்ட நில அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
ALAM SEKITAR & CUACA
சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்தது
6 நவம்பர் 2020, 11:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



