NATIONAL

கோவிட்-19 பரவலைத் தடுக்க நடவடிக்கை, அரசு விரைவில் அறிவிக்கும்

1 அக்டோபர் 2020, 8:48 AM
கோவிட்-19 பரவலைத் தடுக்க நடவடிக்கை, அரசு விரைவில் அறிவிக்கும்

ஷா ஆலம், அக் 1-  சிலாங்கூரில் கோவிட்-19  நோய்த்  தொற்று சம்பவங்களின்

எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதனை தடுப்ப-

தற்கான தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது.

அந்நோய்ப் பரவலை விரைந்து கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அந்நடவடிக்கை கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை மாநில அரசு அணுக்கமாக

கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கோவிட்-19 பணிக் குழு மற்றும் மாநில பாதுகாப்பு மன்றம் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய கூட்டத்தை தாம் விரைவில் கூட்டவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

கடந்த நான்கு நாட்களாக சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை

இரண்டு இலக்கங்களாக அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.