SELANGOR

ஜாலான் ஓத்மான் சந்தைக் கடைகளின் வாடகையை உயர்த்திய எம்பிபிஜேவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் !!!

7 ஜூன் 2020, 11:54 AM
ஜாலான் ஓத்மான் சந்தைக் கடைகளின் வாடகையை உயர்த்திய எம்பிபிஜேவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் !!!

கோல லங்காட், ஜூன் 7:

ஓத்மான் சாலை சந்தையின் வாடகை அதிகரிப்பு குறித்து பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திடம் (எம்பிபிஜே) மாநில அரசு விளக்கம் கோரும். "ஏன் முடிவு எடுக்கப்பட்டது, அது எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க நான் எம்பிபிஜேவை தொடர்பு கொள்கிறேன். முடிவை மறு ஆய்வு  செய்வதற்கு ஒரு காரணம் இருந்தால், அவ்வாறு செய்யுமாறு நான் அவர்களிடம் கேட்பேன், ”என்று டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநில மந்திரி  பெசார், தாமான் லங்காட் மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வசிப்பவர்களுக்கு உணவுப் பொருட்களை  நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) நிர்வாகத்தில் கீழ் உள்ளவர்களுக்கு  வழங்கினார். எம்பிபிஜே அறிவிப்பின் அடிப்படையில் சந்தை வாடகைகள் மாதத்திற்கு ரிம 140 இலிருந்து ரிம 400 ஆக உயர்த்தப்பட்டதாக வர்த்தகர்கள் குழு நேற்று கூறியது. இப்பகுதியில் கோவிட் -19 சம்பவங்களைத் தொடர்ந்து மே 10 முதல் மூட உத்தரவிடப்பட்டதையடுத்து ஓத்மான் சாலை சந்தை நேற்று முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.