NATIONAL

மந்திரி பெசார்: புதிய சம்பவங்கள் குறைந்துள்ளது , கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முயற்சிகளை தொடருவோம் !!!

13 ஏப்ரல் 2020, 1:34 PM
மந்திரி பெசார்: புதிய சம்பவங்கள் குறைந்துள்ளது , கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முயற்சிகளை தொடருவோம் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 13:

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. இதன் மூலம் இந்நோய் தாக்கத்தை நாம் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

" இன்று சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் 13 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஒப்பிடும் போது இன்று குறைந்த நிலையில் உள்ளது ( நேற்று 53 சம்பவங்கள் மற்றும் சனிக்கிழமை 35 சம்பவங்கள்). மாநில அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. கோவிட்-19 நோய் சங்கிலியை நாம் அறுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  #SelangorGempurCovid19,"

என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,249 கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.