RENCANA PILIHAN

மந்திரி பெசார்: தொடர்ந்து வீடு வீடாக சென்று மூத்த குடிமக்களை பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்தும் !!!

12 ஏப்ரல் 2020, 3:10 PM
மந்திரி பெசார்: தொடர்ந்து வீடு வீடாக சென்று மூத்த குடிமக்களை பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்தும் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 12:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் கோவிட்-19 நோய் பரிசோதனையை சிவப்பு பகுதியில் வீடு வீடாக சென்று மூத்த குடிமக்களை குறி வைத்து நடவடிக்கையை முடுக்கியிருக்கிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக செல்கேர், சுகாதார இலாகா, காவல்துறை மற்றும் உலு லங்காட்  மாவட்ட இலாகா ஆகியவையின் ஒருங்கிணைந்து செயல்பாடுகள் மூலம் 649 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

" மாநில அரசாங்கம் தங்களது அரிய பணியைத் சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மூத்த குடிமக்களை குறி வைத்து பரிசோதனையை செய்கிறது. நாம் கோவிட்-19 நோய் பரவலை ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்," என்று டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.