NATIONAL

சுகாதார அமைச்சு: புதிய சம்பவங்கள் குறையும் வாய்ப்பு; பிகேபி நடவடிக்கைக்கு வெற்றி !!!

11 ஏப்ரல் 2020, 10:27 AM
சுகாதார அமைச்சு: புதிய சம்பவங்கள் குறையும் வாய்ப்பு; பிகேபி நடவடிக்கைக்கு வெற்றி !!!

புத்ராஜெயா , ஏப்ரல் 11:

சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 14-இல் முடியும் பொழுது குறைந்து விடும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று 2,462-ஆக இருக்கும் எண்ணிக்கை அடுத்த வாரம் 2,033-ஆக குறையும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை காட்டுகிறது.

" இது பிகேபி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் வெற்றியாக கருதுகிறேன். பிகேபி நடவடிக்கை கோவிட்-19 சம்பவங்களை குறைத்துள்ளது," என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.