ANTARABANGSA

உலகில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது !!!

3 ஏப்ரல் 2020, 4:56 AM
உலகில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது !!!

அமெரிக்கா, ஏப்ரல் 3:

தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும்  நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  தெரிவிக்கிறது. இப்போது உலகளவில் அதிகமான பாதிப்புகளையும் 50,000 -க்கும் மேற்பட்ட இறப்புகளையும் எட்டியுள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமெரிக்காவின் பாதிப்பு மற்றும் ஸ்பெயினிலும் இத்தாலியிலும் உலகிலேயே மோசமான சூழ்நிலையில் இருக்கிறது என்று பதிவு செய்துள்ளது.  இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,900-ஐ தாண்டியுள்ள வேளையில் அதைத் தொடர்ந்து ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது.

240,000 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளது அமெரிக்கா. ஏற்கனவே அமெரிக்கா உள்நாட்டு விமான பயணத்திற்கான சேவைகளை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.