NATIONAL

பிகேபி நீட்டிப்பு: உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம்

1 ஏப்ரல் 2020, 5:16 AM
பிகேபி நீட்டிப்பு: உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம்

புத்ராஜெயா, ஏப்ரல் 1:

எதிர் வரும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் உற்பத்தி, மொத்த வியாபாரம், கிடங்கு சேவை, சில்லறை வணிகம்  மற்றும் இணைய வணிகம் ஆகிய வணிகங்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் நல அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனாலும், பிகேபி காலகட்டத்தில் தேசிய பாதுகாப்பு மன்றம், மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் இணைந்து நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது என விளக்கம் தந்துள்ளது.

" இந்த துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிகேபி காலகட்டத்தில் அரசாங்க நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சு எதிர் பார்க்கிறது. மேற்கண்ட நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது," என்று அமைச்சர் டத்தோ அலேக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.