NATIONAL

கம்யூனிஸ்ட் கொடி என அவதூறு பரப்பிய நபரை காவல்துறை தேடுகிறது !!!

28 டிசம்பர் 2019, 6:03 AM
கம்யூனிஸ்ட் கொடி என அவதூறு பரப்பிய நபரை காவல்துறை தேடுகிறது !!!

ஜார்ஜ் டவுன், டிசம்பர் 28:

பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் நடைபெற்ற 2019 சிங்கே ஊர்வலக் கொண்டாட்டத்தில் கம்முனிஸ்டுக் கொடி ஒன்று ஏந்திச் செல்லப்பட்டதாக ஒரு காணொளியைப் பதிவிட்டவர் போலீசால் தேடப்படுகிறார்.

அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் அந்த ஊர்வலத்தில் கம்முனிஸ்டுக் கொடி எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர்சைனி முகம்மட் நூர் கூறினார்.

உண்மையில் கம்முனிஸ்டுக் கொடி என்று கூறப்பட்டதில் “கிவானிஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. கிவானிஸ் என்பது ஒரு தன்னார்வலர் அமைப்பாகும்.

“காணொளியில் கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை. இணையப் பயனர்களின் கவனத்தைக் கவர்வதற்காக தவறான காணொளிகளைப் பதிவிட வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறே. அது குழப்பத்தை உண்டு பண்ணும்”, என்றவர் கூறினார்.

#மலேசிய இன்று

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.