ஷா ஆலம், டிசம்பர் 5:
மலேசிய வரலாற்றின் முதல் தங்கும் விடுதி அடங்கிய தமிழ்ப்பள்ளியாக மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி விளங்கும் என நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார். ஒராண்டுக்குள் கட்டப்பட்ட இந்த தங்கும் விடுதியில் 200 மாணவர்கள் தங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
" கடந்த ஜனவரி 1-இல் தங்கும் விடுதி கட்டப்பட்டு அக்டோபர் 31-இல் முடிவு பெற்றது," என்று மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தங்கும் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது இவ்வாறு சேவியர் கூறினார்.
[caption id="attachment_369938" align="alignright" width="500"]
Bangunan asrama SJKT Ladang Midlands Seksyen 7, Shah Alam yang dirasmikan pada 5 Disember 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI[/caption]


