RENCANA PILIHAN

சிலாங்கூரின் மேம்பாட்டிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்!

1 நவம்பர் 2019, 12:33 AM
சிலாங்கூரின் மேம்பாட்டிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்!

ஷா ஆலாம்,  நவம்பர் 3:

இதுவரை சிலாங்கூர் மாநிலம் அடைந்து வரும் மேம்பாட்டிற்காக மாநில மக்கள் அனைவரும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மாநிலத்தின் வளப்பம் காரணமாக இதன் மக்கள் பல்வேறு மேம்பாட்டு அனுகூலங்களை அனுபவித்து வருகின்றனர் என்று மலேசிய இஸ்லாமிய சமய பிரசார அறவாரியத்தின் தலைவர் நிக் ஓமார் நிக் அப்துல் அஜிஸ் கூறினார்.

"சிலாங்கூர் மாநிலத்தை மேம்பாடு காணச் செய்வதற்கு உற்பத்தியைப் பெருக்கும் கடப்பாடு அனைத்து தலைவர்களுக்கும் உண்டு. இவர்கள் மக்களுக்கும் மாநிலத்திற்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்"என்றார் நிக் ஒமார்.

" இது போலவே மத்திய அரசாங்கத்திலும். இன்றைய தலைமுறையினரும் வருங்கால தலைமுறையினரும் பயனடையும் வகையில் கூட்டு வளப்ப இலக்கை நாம் கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.