SELANGOR

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜமாலியா வருகை புரிந்தார்

4 ஏப்ரல் 2019, 2:09 AM
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜமாலியா வருகை புரிந்தார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்.3-

பண்டார் உத்தாமாவில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கட்டம் கட்டமாக சந்திப்புக் கூட்டம் நடத்தினார்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி நடந்த சந்திப்புக் கூட்டத்தில் டாமாய், பெர்மாய் மற்றும் புத்ரி அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

குடியிருப்பாளர்களுடான இச்சந்திப்புக் கூட்டங்களில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதி ஜேஎம்பி பொறுப்பின் கீழ் உள்ளவை. ஆயினும், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண தமது தரப்பும் முயற்சிக்கும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு நடந்த மண் சரிவு சம்பவத்தில் பாதிப்படைந்த பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பது பெர்மாய் மற்றும் பாயு புத்ரி ஆகிய அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எடுத்துரைத்ததாக அவர் சொன்னார்.

:உண்மையில், இது ஜேஎம்பி தரப்பின் பொறுப்பில் உள்ள விவகாரம் என்றாலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பகுதியை சீரமைக்கும் செலவினத்தை நாங்கள் ஏற்க சம்மதிக்கிறோம்” என்றார் ஜமாலியா.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.