SELANGOR

சிலாங்கூரில் துணை மந்திரி பெசார் பதவி தேவையில்லை?

20 ஜூன் 2018, 5:26 AM
சிலாங்கூரில் துணை மந்திரி பெசார் பதவி தேவையில்லை?

ஷா ஆலாம், ஜூன் 20:

சிலாங்கூர் மாநில நிர்வாகத்தில் துணை மந்திரி பெசார் பதவி தேவையில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இந்த நடைமுறை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப் படுகிறது என்றார்.

"  துணை மந்திரி பெசார் பதவி நமது நிர்வாகத்தில் இல்லை. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பாரம்பரியம் தொடரப்படும்," என்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

கடந்த 2008-இல் இருந்து சிலாங்கூரில் துணை மந்திரி பெசார் பதவி நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல், முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் 2014-இல் இந்த நடைமுறையை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.